மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday 9 January 2024

நடுநிலைப் பள்ளிகளில் ஒரு கணினி பயிற்றுநர் பணி நியமனம்..

 தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது.




தமிழக அரசு வருகின்ற  கல்வியாண்டு  ஜீன் முதல் 

6992 நடுநிலைப் பள்ளிகளில் hi-tech-lab, Internet வசதியுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி பயிற்றுநர் மற்றும் 20000 தொடக்கக் பள்ளிகளுக்கு internet வசதியுடன் Smart class வகுப்பறைகள் அமைக்கப்படும்..







 வருகின்ற 2024-2025 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

60,000  கணினி ஆசிரியர் குடும்பத்தின் சார்பாக மனமிகு தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் அவர்களுக்கும் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிப்பு மிக சிகரம் சதீஷ் ஐயா அவர்களுக்கும் தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சார்பாக மனமார்ந்த நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.


வெ. குமரேசன்,

9626545446

பொதுச் செயலாளர்,

 தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.


Saturday 3 June 2023

அரசுப்பள்ளியில் கணினி பாடம்!!!

 முதல்வர் பிறந்தநாளில் முதல்வருக்கு கோரிக்கை வைத்த கணினி ஆசிரியர்கள்!!!...

கலைஞரால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி கணினி அறிவியல் பாட புத்தகம் (6-10) ஆண்டு 2011.

கருணாநிதி அறிமுகப்படுத்திய கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தொடங்கப்படுமா??? 

திருச்சி: அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியிலேயே கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் 2006-2011 வரை முதல்வராக இருந்த மு.கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அப்போது 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, அதற்கான தனிப் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில், கணினி அறிவியல் பாடத்தை கைவிட்டு, அறிவியல் புத்தகத்திலேயே கணினி அறிவியலுக்கு 3 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் விருப்ப பாடமாக உள்ளது.

திருச்சி: அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியிலேயே கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் 2006-2011 வரை முதல்வராக இருந்த மு.கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அப்போது 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, அதற்கான தனிப் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில், கணினி அறிவியல் பாடத்தை கைவிட்டு, அறிவியல் புத்தகத்திலேயே கணினி அறிவியலுக்கு 3 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் விருப்ப பாடமாக உள்ளது

அனைத்து துறைகளிலும் கணினியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும் இந்த காலக்கட்டத்தில், அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடத்தை தனிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்கின்றனர் கணினி அறிவியல் பட்டதாரிகள்.

1-ம் வகுப்பு முதல்... இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வெ.குமரேசன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்காக கடந்த திமுக ஆட்சியில் கணினி அறிவியல் தனிப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைப் பார்த்து தான், கேரளாவில் 10-ம் வகுப்பில் கணினி அறிவியல் 6-வது பாடமாக சேர்க்கப்பட்டது

வெ . குமரேசன்



ஆனால், 2011-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இப்பாடம் கைவிடப்பட்டது. எனவே, ஏழை, எளிய மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் கணினி அறிவியல்

பாடத்தை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவதுடன், கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற ஏறத்தாழ 60 ஆயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கும். இதற்கு தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


மாணவர் சேர்க்கை உயரும்: இதுகுறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார் கூறியது: குழந்தைகள் சிறு வயதிலிருந்தே கணினி அறிவியல் பாடத்தை கற்றால் தான், அவர்கள் கல்லூரியில் அந்தத் துறையை தேர்வு செய்யும்போது, பெரிய அளவில் சாதிக்க வாய்ப்பு ஏற்படும். தொடக்க கல்வியிலேயே கணினி பாடத்தை அரசுப் பள்ளிகளில் நடத்த வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை நாங்கள் மாணவர் சேர்க்கைக்காக வீடுகள்தோறும் சென்ற போது பல பெற்றோர்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

எஸ்.சிவகுமார்.

எனவே, இதை அரசு பரிசீலித்து கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் கணிசமாக உயரும் என்றார்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய உழவர் சந்தை, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்து செயல்படுத்தி வருகிறார்.மேலும், கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது. எனவே, இக்குழுவினர் இத்திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கணினி பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


திரு வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.


நன்றி திருச்சி :இந்து தமிழ் நாளிதழ் 

✍️எஸ். கல்யாணசுந்தரம்.


News source:ClicK Here.

https://www.hindutamil.in/amp/news/education/1000997-computer-science-in-government-schools.html

Thursday 18 August 2022

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு !!!


60,000 கணினி ஆசிரியர்களும் ஒரே மாதிரியான (subject)தலைப்புகளில் ஈமெயில் செய்வோம்..




Subject:

கலைஞரின் கனவு திட்டமான கணினி அறிவியல் பாடத்தை அரசு ஆரம்ப பள்ளியிலிருந்து  கொண்டு  வர வேண்டும் ஆசிரியர்கள் (ம)மாணவர்கள் கோரிக்கை...


Email. Id. :  aasiriyarmanasu@gmail.com, aasiriyarkaludananbil@gmail.com


Compose Mail:

தங்களுடைய மேலான கருத்து:

Name:

Address:

Mobile no:


Attach File (Ex):

தங்கள் கோரிக்கையும் பதிவு செய்து அனுப்பலாம்..



👇👇👇


https://drive.google.com/file/d/1-TBT485o_ZsSjx5fqRdM7ZHa3CmykKQ6/view?usp=drivesdk

கணினி ஆசிரியர்களா நீங்க இத முதல்ல கண்டிப்பா செய்யுங்க மற்ற கணினி ஆசிரியர் நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்தி மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு கோரிக்கையை அனுப்பி செய்ய வையுங்கள்.


எறும்பு ஊற மாமலையும் தேயும்"

கண்டிப்பாக நாமும் ஒரு நாள் வெல்வோம்,அது வெகு தொலைவில் இல்லை...

அனைவருக்கும்பகிரவும் கணினி ஆசிரியர்களே கல்வி அமைச்சர் நமது கோரிக்கையை கேட்கிறார்!!!! 


திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014


Saturday 15 May 2021

சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர்கள் கோரிக்கை:

 சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர்கள் கோரிக்கை:



மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.

தமிழ்நாடு


அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.

அ) அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே  ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும். 

ஏழை  மாணவர்களுக்கு நல்க்கல்வி கிடைத்திட மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன் முதலில் கணினி அறிவியல் பாடத்தை 6ம்வகுப்பிருந்து அறிமுகம் செய்தவர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்க்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நியாயமாக  கிடைக்க வேண்டிய கணினி கல்வியை 10 ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது அதிமுக அரசு. கலைஞர் தந்த கணினி கல்வியை நமது கழக ஆட்சியில் நடைமுறை படுத்த வேண்டுகிறோம்.

குறிப்பு:நம்மை பின்பற்றி அண்ட மாநில கேரள அரசு மற்ற மாநில அரசு பள்ளிகளில் 1வகுப்பு முதல் கட்டாயப்பாடமாகவும் ஆறாவது பாடமாக கொண்டுவந்துள்ளது.(பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்)


ஆ) சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி பாடம் மீண்டும் உதிக்க:      


     

ஆ, சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கலைஞரால்   கொண்டுவரப்பட்ட கணினி அறிவியல்  பாட புத்தகம் பல கோடி செலவில்  அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு  பயன்படாத வண்ணம் இன்று வரை கடந்த 10 ஆண்டுகள் முடக்கப்பட்டுள்ளதை  நடைமுறை படுத்த வேண்டும்.


இ)தரம் உயர்த்தம் செய்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்.

கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய அதிமுக   அரசு 2011லிருந்து  இன்று வரை தரம்  உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில்  கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவில்லை 

 ஈ) பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

 கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும் நமது கழக ஆட்சியில்.

 "கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான  கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள்  பயன்பெறுவார்கள்".                     

                                                                     **********&**********

சமச்சீர் கல்வியில் மாண்புமிகு கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிகளில் கொண்டுவர கடந்த 10வருடங்களாக ஒரே துறைக்கு 7அமைச்சரர்களுக்கு மனுக் கொடுத்தே மாய்ந்துவிட்டது எங்கள கரங்கள் மட்டும் அல்ல 60000 வேலை இல்லா வேலையில்லா கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் மனமும்  தான்.



வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

Monday 15 March 2021

கண்டா வர சொல்லுங்க கலைஞரை கையோட கூட்டி வாருங்கள்! ! ! (அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினிக் கல்வி கிடைத்திட)

 

கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசுப்பள்ளியில் கணினி அறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக அரசு பள்ளி மாணவர்களும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் ஆனது அரசுப் பள்ளியின் வாசலை எட்டாமல் போனது.

வேலையில்லா கணினி ஆசிரியர்கள் சமீபகாலமாக எதிர்பார்ப்புடன் கூடிய ஏமாற்றங்கள் சந்திப்பது சர்வசாதரணமாகிவிட்டது. குறிப்பாக, இவர்கள் திமுக ஆட்சி அமைந்தவுடன், இவர்களுடைய கஷ்டங்கள் கானல்நீராக கரைந்துவிடும் என்ற கனவில் இருந்துவந்த இவர்களுக்கு திமுக தேர்தல் அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்கள் அவரது ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையில், கணினி அறிவியல் பாடத்தை 6 முதல் 10ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமின்றி, பள்ளிகளில் கணினி பாடத்தை அமல்படுத்த வேண்டும் உத்தரவிட்டதோடு மட்டுமின்றி, 50 லட்சம் அச்சிடப்பட்ட பாடபுத்தகங்களையும் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பினார்.





அந்த சமயத்தில், வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்கள் மனதில் ஒரு விதமான வண்ண ஒளி பிறந்தது, நமக்கும் அரசு வேலை உண்டு, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றலாம் என்று நம்பிக்கையும் மனதில் உதித்தது. 

கணினி பாடத்தை உருவாக்கிய இதயம் நின்று விட்டது - கணினி ஆசிரியர்கள் குடுபத்தினர்



ஆட்சி காட்சி மாற்றத்திற்கு பின், கணினி அறிவியல் பாடத்திட்டம் அடியோடு முடக்கப்பட்டது, புத்தகங்கள் அழிக்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரிகளுக்கும், அதனை நம்பி படித்து கொண்டிருந்தவர்களுக்கும் பேரிடியாக விழுந்தது.   



ஏழை மாணவர்களின் கணினி அறிவியல் பாடப்புத்தகம் குப்பைகளாக மாற்றப்பட்டது ஆர்டிஐ தகவல்



அன்றைக்கு ஆரம்பித்தது கணினி ஆசிரியர்களின் போராட்ட வாழ்க்கை, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணினி ஆசிரியர் குமரேசன் அதற்கான முன்னெடுப்பை தொடங்கி, கணினி ஆசிரியர்களை ஒன்றிணைக்கும் வகையில் களப்பணியை தொடங்கினார். அவருடன் கைகோர்த்த பல வேலையில்லா ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்தனர். 

(உடனே நீங்கள் சுயநலம் என்று யோசிக்காதீர்கள், இவர்கள் லட்ச கணக்கில் சம்பளம் கேட்கவில்லை, குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே கேட்டனர், ஓரு கட்டத்திற்கு மேல், அரசு பள்ளி மாணவர்களுக்கு சம்பளமின்றி வேலை பார்க்க தயராக இருப்பதாகவும், அனுமதி தர வேண்டும் என்று அரசுக்கு கடிதம் கொடுத்து கெஞ்சி கூத்தாடினார்கள், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.)  


அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவந்தால் இலவசமாக கற்றுக் கொடுக்க முதல்வர் தனிப்பிரிவுக்கு கொடுத்திருந்த மனு.




 அன்றைய தொடங்கிய போராட்டம், அரசியல் தலைவர்கள் சந்திப்பது, அமைச்சர்களிடம் கால்கடுக்க நின்று கோரிக்கை மனு  வழங்குவது, ஊடகங்கள், நாளிதழ்கள் மூலமாக அவர்களது கோரிக்கை மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வது, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவது இவர்களது பணி நகர்ந்து கொண்டே இருந்தது.


கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளிகள் கொண்டுவர மத்திய அரசுக்கு கொடுத்த மனுவின் பதில்




இவர்களுடைய தொடர் முயற்சியினால், தமிழகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி அறிவியல் காலிபணியிடங்களில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, ஏழை வீட்டு பிள்ளைகள் கணினி கல்வியை படித்து வருகின்றனர். இவர்களின் உந்து சக்தியினால்தான், கணினி அறிவியல் ஆய்வகத்தின் மோசமான நிலையை வெளிகொணர்ந்து, உயர்தர கணினி ஆய்வகங்கள் பள்ளிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




இதுதவிர, கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். 

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் கொண்டுவர தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அதற்கான பதில்



கணினி சார்ந்த கல்வியில் இவர்களுடைய பங்கு முக்கியமானது. 

இவ்வாறு தங்களது 10 ஆண்டு வாழ்க்கையை இப்படியும் நகர்த்தி வந்துள்ளனர் .

இருந்தபோதும், தற்போது ஆட்சியாளர்கள் விட, திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு பள்ளிகளில் கணினி பாடம் உறுதியாகவும், முழுமையாகவும் கொண்டு வரப்படும், ஏனென்றால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திட்டம் என்பதால், திமுக இந்த கோரிக்கையை செயல்படுத்தும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் இருந்துகொண்டே இருந்தது. 

இதுதவிர, அவர்களது கோரிக்கை திமுக தேர்தல் அறிக்கையில் நிச்சயம் இடம்பெறும் என மிகுந்த ஆர்வத்துடனும், களையிழந்த சந்தோஷத்துடன் கனவு கண்டு வந்தனர். 

திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியானதும், பெரும்பாலான கணினி ஆசிரியர்கள் தங்களது கோரிக்கை இடம்பெற்றுள்ளதா என ஒவ்வொரு பக்கத்தையும் பரபரப்புடனும், ஆர்வமுடனும் தேடி தேடி படிக்க ஆரம்பித்தனர். அவர்களின் தேடல் இறுதிபக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. 

எங்காயவது கணினி என்ற வார்த்தை இடம்பெற்றிருக்காதா? என்ற ஏக்கம் அவர்களை மறக்கடிக்க செய்தது உணர முடிந்தது. இறுதியில், அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே, இங்கயும் நாம் கைவிடப்பட்டுவிட்டோமோ என்ற கவலையும் அவர்கள் ஆழ்மனதில் மையம் கொண்டது. 
வேலையில்லா ஆண் ஆசிரியர்கள் மனக்குமறலுடனும், பெண் ஆசிரியர்களுக்கு வெளிப்படையாகவே கண்ணீர் விட்டனர். பத்து வருடத்திற்கான போராட்டம் கிடைத்த வெற்றி இதுதானா என்று மன புலம்பலும் இருந்தது. இவ்வளவு தூரம் ஓலக்குரல் வீசியும், திமுக தலைமை செவிக்கு எட்டவில்லையே என்ற ஆதங்கம் ஆட்டிபடைத்தது. அவர்களது நம்பிக்கையும், கனவும் சுக்குநூறாக நொடிக்கப்பட்டுள்ளது.   


ஏன் கணினி கல்வி வேண்டும்?


டிஜிட்டல் இந்தியா என்று நாம் பேசி கொண்டிருக்கும் இந்த வேளையில், இதே டிஜிட்டல் கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டா கனியாகவே செயற்கையாகவே புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இங்கேயும் பணம் இருக்கிறவன், இல்லாதவன் என்ற பாகுபாடுதான், தனியார் பள்ளியில் கணினி கல்வி, அரசு பள்ளி வெறும் கல்வி. 



தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதலே அப்பள்ளி குழந்தைகளை கணினியை கல்வியை கற்பித்து வருகின்றனர். அப்பள்ளி மாணவர்கள் கணினி பயன்பாடை எளிதாக கையாள்கிறான். 




இங்கு நம் அரசு பள்ளி மாணவன் 11ம் வகுப்பில்தான் கணினியை தொட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதுவும் சில குறிப்பிட்ட பாட பிரிவு மாணவர்கள் மட்டுமே. அதன்பின் அவன் கணினியின் அடிப்படையை படிக்க ஆரம்பிக்கிறான், ஆய்வகத்தில் கணினியை முழுமையாக பயன்படுத்த முடியாமல் தொட்டு ரசிக்கதான் முடிகிறது. 

பின் அரசு பள்ளி மாணவர்கள் எப்படி உயர்கல்விக்கு சென்று ஜொலிக்கமுடியும் என்று நம்புகிறீர்கள். கணினி இணையம் ஜெட் வேகத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது, நம் அரசு பள்ளி விமானம் வேகத்திற்காவது செல்ல வேண்டாமா, ஆனால், நம் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்து வேகத்திற்கு வந்துள்ளனர் 



கல்விக்காக கிட்டதட்ட 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கும் தமிழக அரசு கணினி கல்வியை மட்டும் முழுமையாக செயல்படுத்த மறுப்பது ஏன். தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை அடிபட்டுவிடுமோ என்றா?. ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ கல்வியில் கண்முன்னே இருக்கும் பிரச்னையை சரி செய்யாமல், பிற திட்டங்கள் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதுவும் மாணவர்களுக்கு உதவாது. 

 கணினி கல்வியை கொண்டுவந்தால், நம் வீட்டு பிள்ளைகள்தான் படித்து பயன் பெறுவார்கள், கணினி கற்று கொள்வார்கள், நாமும் எது தேவையோ அதை சிந்திக்க மறுப்பதும்  மறப்பதும் மறதியாகவே உள்ளது .

கணினி கல்வி அவர்களுக்கான கோரிக்கையல்ல, நமக்கான கோரிக்கை… இந்த கோரிக்கையை பரிசிலீக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!!...

  

Monday 8 March 2021

கணினி ஆசிரியர்கள் பிரச்னை தீர்க்க குழு, 3 ஆண்டுக்கு பின் பதில் அளித்த ‘மத்திய அரசு’

 கணினி ஆசிரியர்கள் பிரச்னை தீர்க்க குழு, 3 ஆண்டுக்கு பின் பதில் அளித்த  ‘மத்திய அரசு’




6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயம் அரசு பள்ளிகளில் கொண்டு வர வேண்டும், அரசு பள்ளியில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்களில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு கணினி ஆசிரியராவது நியமிக்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு ஆணையம், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை ஆகியவற்றிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.


அதில், மத்திய அரசு, தமிழக அரசு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என்று வேண்டுகோளாகத்தான் வைத்துள்ளதே தவிர ஒரு உத்தரவாக பிறப்பிக்கவில்லை. பெயரளவில் எங்களை சமாளிக்கும் நோக்கில், தேர்தல் மனதில் வைத்து, இந்த பதில் மனு தயார் செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இதனால், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பற்ற 60000கணினி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எதிர்வரும் தமிழக அரசிடம் எங்கள் கோரிக்கை வலுவாக வைக்க திட்டமிட்டுள்ளோம்.


இந்த நிலையில், கிட்டதட்ட மூன்றாண்டு விழிப்புக்கு பின், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, மத்திய அரசு, சங்க செயலாளருக்கு ஒரு பதில் மனு அனுப்பியது, அதில், கணினி ஆசிரியர்கள் பிரச்னைகளை ஆராயவும், அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஒரு ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


தமிழக அரசு இடைக்கால பட்ஜெட் தொடரில் கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி பாடத்தை கொண்டு வந்துள்ளது ஆனால் அதற்கு ஆசிரியர்கள் நியமனம் இன்றி அரசு பள்ளியில் பணிபுரியும் வேறுபாட ஆசிரியர் கொண்டே கற்பிக்க நினைக்கிறது.அதற்கு பயிற்சி கொடுப்பதாக செய்திகள் வெளிவருகின்றன . 


"இதற்கெல்லாம் முன்னோடியாக சமச்சீர் கல்வியில் 2011ஆம் ஆண்டு  கலைஞர் ஆட்சிக்காலத்தில் கணினி அறிவியல்  தனிப்பாட புத்தகங்களாக அச்சிட்டு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்காக வைத்திருந்தது. அந்த பாடமும் பாட புத்தகமும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இன்று வரை கிராமப்புற மாணவர்களுக்கு சென்றடையவில்லை கடந்த பத்தாண்டுகளாக.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் வெளிவந்த ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கணினி அறிவியல் பாட புத்தகம்..



2011ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்திற்கு அச்சடிக்கப்பட்ட அனைத்து பாட புத்தகங்களையும்  அதிமுக அரசு குப்பைத் தொட்டியில் போட்டு உள்ளதாக RTI தகவல் தந்துள்ளது .



மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்திற்காக  கொடுக்கப்படும் நீதியை வீணாகாமல் தமிழக மாணவர்களுக்கு முறையாக சென்றடையும் விதத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் இதற்கு தகுந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதே இன்றைய வரை எங்களது கோரிக்கை.


வெ.குமரேசன்,மாநிலப் பொதுச் செயலாளர் ,9626545446 ,தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

POPULAR POSTS